புதன், 23 நவம்பர், 2011

உயிர்களின் தோற்றம்



உலக உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்கிறவர்கள் டார்வினின் கோட்பாடுகளில் இருந்தே அல்லது அவர்களின் அறிவுக்கு எட்டிய ...கிடைக்க கூடிய தரவுகளின் அடிப்படையில் தங்களது அறிவை புலப்படுத்துகிறார்கள் . குறிப்பிட்ட துறை பற்றி அறியாமையில் அல்லது அதைப்பற்றிய முழுமையான புரிதலை பெறாதவர்கள் கிடைத்த கொஞ்ச தகவலை வனாலாவ புகழ்ந்து தள்ளிவிடுகிறனர் இங்கு தகவலைப் பெறுகிறவர் குழப்பவாதியாகி மற்றவர்களையும் அழகாக குழப்ப தலைப்படுகிறனர். குழப்பியவர் அறிவாளியாகி இந்த குமுகத்தை குழப்பவாதிகளின் கூடரமாக்கி விடுவார்கள் . எந்த செய்தியையும் பருண்மையாக ஆய்வு செய்தே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ அறிவர்கள் கூறுகிறார்கள் வள்ளுவமும் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என அழாகாக பதிவு செய்கிறது .

இன்று தமிழகத்தில் மருத்துவத்தை மேற்கோள் கட்டுகிறவர்கள் சரகரின் சுசுருத சம்கிதைலிருந்தே மேற்கோள் கட்டுவார்கள் சரகரின் காலம்கிமு ஆறாம் நூற்றாண்டு என்பார்கள் அனால் சமஸ்கிருதம் வரிவடிவம் (எழுத்துவம் )பெற்றதே முதல் நூற்றாண்டில்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் . அனால் சிந்து வெளி காலங் களிலேயே தமிழ மருத்துவம் (சித்த மருத்துவம் ) சிறந்து விளங்கியதை பல ஆய்வுகள் சான்று காட்டுகிறது அதுபோல உயிர்களின் தோற்றம்
மரபியலில்
ஒன்றறிவதுவே உற்றி வ்துவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அதனொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
ஆறறிவதுவே அவற்றோடு மனனே .

என பதிவு செய்கிறார்தொல்காப்பியர் அதுமட்டு மில்லாமல் இதை
நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினர் எனவும் பதிவு செய்கிறார்
தான் கண்ட அறிவியலை அழுத்தம் திருத்தமாக கூறும்போது
"மக்கள்தாமே ஆறறி உயிரே "(பொருள் மரபியல் 33 ) என தொல்காப்பியர் பதிவு செய்ய தவறவில்லை இவர் எழுத்துக்கும் சொல்லிற்கு மட்டும் இலக்கணம் கண்டவறல்ல மனித வாழ்வியளுக்கே இலக்கணம் கண்டவர் என்பதை நாமறிவோம் .

அந்த வகையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உயிர்களின் தோற்றத்தை சிறப்பாக அறிவியல் நோக்கில் பதிவு செய்கிறார் ஆக தமிழர்கள் பல்லாயிரமாண்டு களுக்கு முன்னரே அறிவியலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தனர் .உயிர்கள்
புல்லும் மரனும்ஓரரிவினவே (புல், மரம் )
நந்தும் முரலும் ஈரரிவினவே (சங்கு , நத்தை , சிப்பி போன்றவை )
சிதலும் எறும்பும் மூன்றவு உயிர்கள்
நண்டும் ,தும்பியும் நான்கறிவு கொண்டவை
விலங்கு களும் பறவைகளும் ஐந்து அறிவு கொண்டவை
மக்களினமும் பறவைகளும் ஆறறிவு கொண்டவை என பதிவு செய்கிறனர் .
தொட்டால் உணருவது ஒரு அறிவு
இவற்றுடன் சுவை அறிதல் இரண்டறிவு
மூன்றாம் அறிவு நாற்றத்தை உணருதல் (நாற்றம் -மணம்)
நான்காம் அறிவு கண்களினால் காணுதல்
ஐந்தாமறிவு கேட்கும் திறன் பெறுதல்
சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவு .
ஆக உந்த பேரன்டத்திற்க்கே தமிழர்கள் அறிவியலையும் நகாரீகத்தையும் சிறந்த கலைகளையும் வழங்கியவர்கள் என்பது உண்மை . ஆனால் இதை தமிழர் உணராமல் அடிமையாக கிடக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது .

மாறுபட்ட கோணத்தில் அடுத்த பதிவிலும் சிந்திப்போம் .

6 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"உயிர்களின் தோற்றம்"/

very nice sharing...

பெயரில்லா சொன்னது…

தரமான உங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்...

vimalanperali சொன்னது…

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

தமிழனாய்ப் பிறந்ததை நினைக்கப் பெருமைதானே தவிர சிறுமையில்லை.ஆனால் ஏதோ சாபக்கேடுமல்லவா நம்முடன் கூடப் பிறந்திருக்கிறது !

Unknown சொன்னது…

நல்ல விளக்கம்

Nanjil Siva சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள் !!