வியாழன், 8 செப்டம்பர், 2011

தமிழர்களின் தாழ்வு எண்ணம் தேவையா?

இப்போது தமிழர்கள் பலருக்கு தங்களின் உயரிய மொழிபற்றியோ, அல்லது இங்கு விரிந்து கிடக்கும் அளவு இல்லாத மெய்மங்களைபற்றியோ அறிந்திருக்கவில்லை . பாவம் இது அவர்களின் பிழை இல்லை என்பது எமது எண்ணம்இந்த உயரிய மொழியை பற்றி அவர்களுக்கு உணர்த்த வில்லை என்பது எமது எண்ணம் . இவர்கள் தமிழையும் படிப்பதில்லை , இவர்கள் மேதாவித்தனம் நிறைந்து உள்ளதாக கூறும் ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழிகளையோ ஊன்றி படிபதில்லை அப்படி படித்தால் அவர்களை தானே தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும் இப்படி பட்டவர்களிடம் யார் வேண்டுமானாலும் என்ன கூறினாலும் அப்படியே நம்பி விடுவார்கள்.
தமிழர்களின் அறிவைத்தவிர, ஆக இந்த மண்டூகங்களுக்கு அறிவு தெளிந்த நாம்தான் சொல்ல வேண்டி இருக்கிறது என்ற எண்ணத்தோடு பொறுமையாக சொல்வோம்.

தமிழ செல்வங்கள் அளவில்லாமல் கொட்டி கிடைக்கிறது இதை சீண்ட ஆளில்லாமல் கிடைக்கிறது . அதிலொன்று திருமூலரின் திருமந்திரத்திலிருந்து

சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே .

அதாவது சூரிய காந்தம் என திருமூலர் குறிப்பது இன்று பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னர் அறியப்படதான லென்சைதான். அதாவது லென்சையும் பஞ்சியையும் ஒன்றாக வைத்து இருந்தால் பஞ்சி எரியாது அதை சூரியனின் குவிமையத்தில் முறைப்படி காட்ட அது பஞ்சை சுட்டு எரிக்கும் என்கிற ரீதியில் பதிவு செய்கிறார் . அதாவது திருமூலரின் காலம் என அறியப்பட்டது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது . இந்த காலங்களில் லென்சை அதன் பயன்பாட்டை தமிழன் அறிந்து வானவெளியில் தமிழன் உயர்ந்து இருந்தமையை காட்டுகிறது . இதை தமிழ் மாடுகளுக்கு நாம் காட்டவேண்டியது நமது தேவையாகிறது . அறிவு துறையினரே நீங்கள்தான் இந்த பக்கத்திற்கு வருகிறீர் நீங்கள்தான் எல்லோருக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும்

தமிழர் கலைகளை காப்போம் வென்றெடுப்போம்..

நண்பர் சுகுமாரன் இந்த பக்கத்தில் தொடர்ந்து எழுதுங்கள் என கேட்டமையலும் .டென்மார்க்கிலிருந்து சந்திரகௌரி தொடர்ந்து எழுத கோரியமையாளும் பதிவு செய்யபடுகிறது . நாம் தொடர்ந்து எழுதமைக்கான காரணம் இந்த பக்கத்திற்கு அதிகமானோரை வரவழைக்க இயலவில்லை எனவேதான்.

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

இதுவரை கேள்விப்படாடாத புதிய அரிய
தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

தமிழர் கலைகளை காப்போம் வென்றெடுப்போம்..

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

வேதா. இலங்காதிலகம்.

ஊரான் சொன்னது…

நல்ல முயற்சி. முயலுங்கள் வருவார்கள். வெற்றி பெற வாழ்த்துகள்!